Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து பகீர்

சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுசென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த

Subscribe to Oneindia Tamil

சென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது (22). இவரை கண்மூடி முருகன் என்று அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

இந்நிலையில் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவில் ஒரு இடத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் முருகன் உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் வழக்கு

போலீசார் வழக்கு


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

மது அருந்தியுள்ளனர்

மது அருந்தியுள்ளனர்

அதில், முருகன் என்கின்ற கண்மூடி முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், நீலாங்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. . மேலும் இறந்து கிடந்த இடத்தில் கண்மூடி முருகன் சிலருடன் வந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்மூடி முருகனை குத்தி கொலை செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இதனிடையே சம்பவத்தன்று அபினேஷ் என்பவர் முருகனை மது அருந்த அழைத்து வந்திருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினார்கள்.

8 பேர் கைது

8 பேர் கைது

விசாரணையில், ஒரு வழக்கில் அபினேஷ் சிறை சென்றபோது, அபினேஷின் மனைவியுடன் முருகன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அபினேஷ், நண்பர்களின் உதவியுடன் முருகனை மது அருந்த அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அபினேஷ் உட்பட அவரது நண்பர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான இருவரை தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+