சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து பகீர்
சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுசென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த
சென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது (22). இவரை கண்மூடி முருகன் என்று அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.
இந்நிலையில் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவில் ஒரு இடத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் முருகன் உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் வழக்கு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

மது அருந்தியுள்ளனர்
அதில், முருகன் என்கின்ற கண்மூடி முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், நீலாங்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. . மேலும் இறந்து கிடந்த இடத்தில் கண்மூடி முருகன் சிலருடன் வந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்மூடி முருகனை குத்தி கொலை செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை
இதனிடையே சம்பவத்தன்று அபினேஷ் என்பவர் முருகனை மது அருந்த அழைத்து வந்திருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினார்கள்.

8 பேர் கைது
விசாரணையில், ஒரு வழக்கில் அபினேஷ் சிறை சென்றபோது, அபினேஷின் மனைவியுடன் முருகன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அபினேஷ், நண்பர்களின் உதவியுடன் முருகனை மது அருந்த அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அபினேஷ் உட்பட அவரது நண்பர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான இருவரை தேடி வருகிறார்கள்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்!











Click it and Unblock the Notifications