நாங்க 2 பேரும் ஒரே ஜாதி! நானே ஆம்ஸ்ட்ராங்கை கொல்வேனா? நீதிபதியிடம் ரவுடி நாகேந்திரன் உருக்கம்
சென்னை: நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அப்படியிருக்கும் போது அவரை நான் கொல்வேனா என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என ரவுடி நாகேந்திரன் உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஏற்கெனவே திருவேங்கடம் என்ற ரவுடி, தனது ஆயுதங்களை அடையாளம் காட்ட சென்ற போது போலீஸாரை தாக்கிய போது தற்காப்புக்காக அவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் அவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் மற்ற 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ரவுடி நாகேந்திரன், நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில் அவரை நான் கொல்வேனா என உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞரை நியமிக்க நீதிபதி , கால அவகாசம் வழங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 29ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரவுடி நாகேந்திரன், நான் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். என் மீது பொய்யாக இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்த நாகேந்திரன், தனக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் எங்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்க முடியவில்லை. அப்படியே நியமித்தாலும் வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்கள் என நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவுடி நாகேந்திரன், "நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில் அவரை நான் கொல்வேனா" என உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞரை நியமிக்க நீதிபதி , கால அவகாசம் வழங்கினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications