ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிப்புக்கே இத்தனை குழம்பும் அதிமுக.. 39 தொகுதிகளுக்கு நாக்கு தள்ளிடும் போலயே
சென்னை: திருவாரூர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் இத்தனை குழப்பங்களா என நினைக்க தோன்றுகிறது. இன்னும் 39 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் என்றால் அவ்வளவுதான் போல.
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளுக்கும் மும்முரம் காட்டி வந்தன. இந்நிலையில் முதல் வேளையாக நாம் தமிழர் கட்சியின் சீமான் வேட்பாளரை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தினகரன் அறிவித்தார். பின்னர் திமுக சார்பில் வேட்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு விட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஓரிரு நாட்கள்
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில் அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்.

7 அல்லது 8 தேதிகளில்
அதிமுக எப்போதும் தேர்தலை கண்டு அஞ்சியதில்லை என்று கூறினார்கள். ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூறியபடி இன்னும் இரு நாட்களில் வேட்பாளர் அறிவிப்பு என்றால் ஜனவரி 7 அல்லது 8 தேதிகளில் அறிவிக்கப்படுவார் இந்த நிலையில் திருவாரூரில் ஒரு கோயிலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் 10-ஆம் தேதி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அதாவது வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான அன்றே அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

மாறுபட்ட கருத்து
தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் தம்பிதுரை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஒரு கருத்து சொல்ல , தம்பிதுரையோ மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முடித்து விடுவார்
அதிமுகவுக்குள் ஏன் இத்தனை குழப்பம் நீடிக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா இருந்த போது தேர்தல் என அறிவிக்கப்பட்டு விட்டால் எல்லாருக்கு முன்பே அதிமுக தேர்த்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர் அறிவிப்பு என அனைத்தையும் ஜெயலலிதா முடித்து விடுவார்.

விசாரணைக்கு
ஆனால் இன்றோ நாம் தமிழர் கட்சி கூட முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்த நிலையில் பாரம்பரிய கட்சியான அதிமுகவுக்கு ஏன் இத்தனை குழப்பம்? ஒரு வேளை அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டு திருவாரூர் தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த வழக்கு வரும் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

குழப்பம்
எனவே அன்றைய முடிவுகளை பார்த்துவிட்டு அப்புறம் அறிவிக்கலாம் என அதிமுக எண்ணியிருக்கலாம் என தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் ஒரு இடைத்தேர்தலுக்கே இத்தனை குழப்பம் என்றால் 39 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு நாக்கு தள்ளிடும் போலயே.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications