எல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே!
இரு தலைவர்களும் மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை
Recommended Video
சென்னை: எல்லாம் சரிதான்.. நாட்டில் எவ்வளவோ இடம் இருக்க.. தமிழ்நாட்டில்.. அதுவும் மாமல்லபுரத்தை அதிபரும், பிரதமரும் ஏன் செலக்ட் செய்தார்கள் என்பதற்கு பதிலே கிடைக்காமல் உள்ளது!
மாமல்லபுரம் நமக்கு புராதனமான இடம்.. வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய இடம்.. அதன் சிறப்பம்சங்கள் நமக்கு தெரியும்.. எனினும் சந்திப்புக்கு என்ன காரணம் என்பது முழுவதுமாக நமக்கு தெரியாவிட்டாலும், மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பதும் தெரியவில்லை. இதை பற்றி வெளியுறவுத்துறையும் இதுவரைக்கும் மூச்சு விடவில்லை.
ஆனால் 2, 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2017-ல் இந்தியா - சீனாவுக்கு இடையே ஒரு பிரச்சனை எழுந்தது. இரு நாட்டின் எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளுமே தங்களது ராணுவத்தை குவித்து.. போர் பதட்டத்தை ஏற்படுத்தி.. உலகம் முழுக்க ஒரு பரபரப்பை தந்துவிட்டன.

மோடி அழைப்பு
பிறகு படைகள் விலக்கி கொள்ளப்பட்டது.. அடுத்த வருஷமே இந்த எல்லைக்கோடு குறித்து அதிபரை நேரில் சந்தித்து நம் பிரதமர் பேசி.. கொஞ்சம் சமாதானம் ஆனது. அப்போது, இந்தியாவுக்கு வாங்க என்றும் அதிபரை மோடி அழைத்திருந்தார். அதனால்தான் இப்போது அதிபர் வந்து போயிருக்கிறார்கள் என்கிறது ஒரு சோர்ஸ்.

சூஎன்லாய்
இன்னொரு காரணம் போதி தர்மரை சொல்கிறார்கள். காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர்தான் இன்றைக்கு சீனாவின் முக்கிய கடவுள்.. ஆதர்சபுருஷர்.. இதற்கு முன்பு 1956-ல்தான் அப்போதைய அதிபர் சூஎன்லாய் வந்து இந்த மாமல்லபுரத்தை பார்த்துவிட்டு போனார். புத்த மதம் சம்பந்தப்பட்ட நிறைய குறிப்புகளை அவர் நாட்டுக்கு அப்போது கொண்டு சென்று பரப்பினார். அதற்கு பிறகு வேறு யாருமே அங்கிருந்து வரவில்லை. அதனால்தான் இப்போது ஜின்பிங் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ட்விட்டர்
மற்றொரு காரணம், மோடிக்கு தமிழகம் மீதான அளவுக்கு அதிகமான பாசமும், ஈர்ப்பும் என்று கூறப்படுகிறது. கொஞ்ச நாளாகவே மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் பற்றி புகழாரம் சூட்டி வருகிறார். ட்விட்டர் முதல் ஐநா சபை வரை தமிழின் புகழ் மோடியால் பாடப்பட்டு வருகிறது. அதனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தை பிரதமர் தரப்பு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்லவ நகரம்
ஆக மொத்தம் குத்துமதிப்பாகத்தான் நம்மால் காரணங்கள் அறியப்படுகிறதே தவிர, மாமல்லபுரத்தை இவர்கள் 2 பேரும் ஏன் தேர்வு செய்தார்கள் என்பது முழுமையாக விளங்கவில்லை. ஏன் தேர்வு செய்தார்கள் என்று மண்டையை நாம் பிய்த்து கொள்வதைவிட, அன்றைய தினம் பல்லவ நகரமே பளபளத்தது என்பதும், ஈசிஆர்., ஓஎம்ஆர் ரோடுகள் மினுமினுத்தன என்பதுதான் நமக்கு சந்தோஷமான விஷயம்.

சுத்தம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, சாக்கடை அடைச்சிக்கிட்டு.. நாள் கணக்கா நாறிட்டு இருந்தாலும்.. உடனே வந்து எட்டிப்பார்க்காத கார்ப்பரேஷன் ஊழியர்கள் இரு தலைவர்களும் வருகிறார்கள் என்பதால், பம்பரமாக சுற்றி சுழன்று வேலை பார்த்ததும் நமக்கு மகிழ்ச்சிதான்!
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications