ஸ்டாலின்தான்! எடப்பாடிக்கு காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி.. தப்பு கணக்கு போட்டுவிட்டார்.. இது வேறயா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Why will Edappadi Palanisamy face a huge shock and Why does he want PMK AIADMK alliance

கூட்டணி உறுதி: அதன்படி பாமக 10 சீட், தேமுதிக 7 சீட் கேட்டுள்ளதாகவும்.. ஆனால் பாமக 7 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கேட்ட நிலையில் அது கிடைக்க வாய்ப்பு இல்லை . இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்றும் உறுதி அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன..

பேட்டி: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி எப்படியாவது கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார் . ஏதாவது செய்து கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான் பாமக பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறார். பாமக இருந்தால்தான் 20 இடங்களில் அதிமுக இரண்டாம் இடமாவது வரும் .

கூட்டணி: எப்படியாவது இரண்டாம் இடம் வந்துவிட வேண்டும் என்பதில்தான் அதிமுக உறுதியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே பாமகவின் உதவியை நாடிக்கொண்டு இருக்கிறது அதிமுக. பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. விசிக உடன் இருக்கும் வெற்றி கூட்டணியை திமுக வேண்டாம் என்றும் சொல்லாது.

இதுவரை தமிழ்நாட்டில் பாமகதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அதனால் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதோடு இல்லாமல்.. தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆட்களை அனுப்புகிறார். எப்படியாவது ஸ்டாலினுக்கு எதிராக பெரிய அணியை உருவாக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஸ்டாலின்தான் தனக்கு எதிரி என்று காட்ட எடப்பாடி நினைக்கிறார் .

2024ல் எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கும். இந்த தேர்தல் பலருக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அதில் எடப்பாடி பெறப்போகும் அணி.. பெரிய அதிர்ச்சியாக இருக்கும். பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது.

10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தும் கூட.. அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட பாமக பெரிதாக அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் விசிக - திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அப்படிப்பட்ட பாமகவின் கதவை அதிமுக தட்டிக்கொண்டு இருக்கிறது. பாமக இருந்தால்தான் 20 இடங்களில் அதிமுக இரண்டாம் இடமாவது வரும் . இதனால் பாமக வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+