3வது கூட்டணி அமைக்கிறதா பாஜக? எடப்பாடி - அண்ணாமலை இடையே என்ன மோதல்? நாராயணன் சொன்ன பரபர சீக்ரெட்
சிலர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுவார்கள். சிலர் கூட்டணி வேண்டும் என்று சொல்லுவார்கள்.
சென்னை: பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்குமா நேற்று அதன் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது. அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.
எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

என்ன சொன்னார்?
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

கூட்டணி
இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிந்து புதிய மூன்றாவது கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியை வேண்டுமானால் பாஜக அமைக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது பாஜக - பாமக - தேமுதிக - ஓபிஎஸ் - அமமுக இணைந்து 3வது அணி அமைக்க சான்ஸ் உள்ளது. பாமக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டது. அமமுகவை அதிமுக சேர்த்துக்கொள்ளாது. அதேபோல் தேமுதிகவை அதிமுக சேர்த்துக்கொள்வது கடினம். ஓபிஎஸ் கதையும் அப்படித்தான். அப்படி இருக்க பாஜக பெரும்பாலும் மூன்றாவது கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேட்டி
இந்த நிலையியில்தான் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்குமா என்பது குறித்து நேற்று அதன் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் கிடையாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்யப்படும். அதை பற்றி அப்போது பேசலாம். இப்போதே கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. மற்றபடி கட்சி வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். இப்போது கூட்டணி பற்றி பெரிதாக பேச வேண்டிய அவசியம் கிடையாது. அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம். ஏன் இப்போது பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

என்ன சொன்னார்
சிலர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுவார்கள். சிலர் கூட்டணி வேண்டும் என்று சொல்லுவார்கள். நாங்கள் பல விவாதங்களை நடத்துவோம். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்துக்களை கொண்டு இருக்கலாம். கட்சியை வளர்க்க பலர் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் இப்போது இறுதி முடிவு எடுக்க வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் தேசிய தலைமை இதில் என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம். கட்சியை வளர்ப்பதற்கு ஏற்ற முடிவை எங்கள் கட்சி எடுக்கும்.

நயினார் நாகேந்திரன்
அதைத்தான் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார். இப்போது நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்போமா இல்லையா என்பதை சொல்ல வேண்டியது இல்லை. நாங்கள் எப்போது முடிவு எடுப்போமோ அப்போது சொல்லுவோம். இப்போது தேர்தல் இல்லை. அதனால் இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது. இப்போது தேர்தலே இல்லை அதனால் கூட்டணியும் இல்லை. நாங்கள் 3வது அணி அமைக்க போவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். யூகங்கள் அடிப்படையில் இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்.

பலப்படுத்த வேண்டும்
நாங்கள் கட்சியை பலப்படுத்த வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். பூத் அளவிலான பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் கவனம் செலுத்துகிறோம். கூட்டணி பற்றி பின்னர் பார்க்கலாம். எடப்பாடியை அண்ணாமலை எங்கும் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் அண்ணாமலையை எடப்பாடியும் எங்கும் விமர்சனம் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு இடையில் மோதல் இல்லை என்பதே அர்த்தம். அவர்கள் இடையே மோதல் இருப்பதாக கூறுவதே பொய்யான செய்திதான். எடப்பாடி அண்ணாமலை இருவரும் எங்கும் மாறி மாறி விமர்சனம் செய்துகொள்ளவில்லை என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications