தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்! ரூ 1000+ ரூ 6000= ரூ 7000! பரபரப்பு அறிவிப்பு இன்று வெளியாகிறதா?
சென்னை: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனுடன் தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூ 6000 வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பெய்த அதீத மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அது போல் மருத்துவமனைகளில் எல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து கொண்ட நிலையில் அங்கிருந்த நோயாளிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து ரூ 6000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதை போல் தென் மாவட்டங்களில் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை போல் ரூ 1000 ரொக்கம், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். அவர் இன்றைய தினம் தென் மாவட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணத்தையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications