பவரை உசுப்பி விட்டு பணம் பார்க்கத் துடிக்கும் குரூப்.. புரியாமல் துடிக்கும் சீனிவாசன்!
Recommended Video
சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனும் தேர்தலில் போட்டியிடப் போகிறாராம். அதுவும் தென் சென்னையில்.
தமிழத் திரையுலகில் திடீர் திடீரென அபூர்வ சம்பவங்கள் நடைபெறும். சில தரமானதாக இருக்கும். சில தரை லோக்கலாக இருக்கும். இன்னும் சில இரண்டும் கெட்டானாக இருக்கும். அந்த வகை சம்பவத்தில் ஒன்றுதான் பவர் ஸ்டார் சீனிவாசன் பிரபலமானது.
டிவிட்டர், பேஸ்புக்கில் தன்னைப் பற்றி தானே போட்ட காமெடி பதிவுகளால் படு வேகமாக பிரபலமானார். இவரது காமெடியான ஸ்டில்களும் இவரது வளர்ச்சிக்கு துணை புரிந்தன.
பொறுப்பை என்கிட்ட கொடுங்கள்.. நாளைக்கு பாருங்க பெட்ரோல் விலை 40 ரூபாய் ஆயிடும்.. டி.ஆர். பாலு சவால்
புரியாத புதிர்
இவர் எப்படி பிரபலமானார் என்பதே இன்னும் பலருக்குப் புரியவில்லை. எந்த வேகத்தில் பிரபலமானாரோ அதே வேகத்தில் வீழ்ந்தும் போனார். இப்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு புது ஆசை வந்துள்ளது.
தென் சென்னையில் போட்டி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிரிக்காமல் ஒரு காமெடியை கொளுத்தி போட்டுள்ளார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், வெற்றிபெற்று மத்திய அமைச்சர் தனது இலக்கு என்றும் அவர் அசரடிக்கிறார்.
திருமாவிடம்
இன்ஸ்டண்டாக பிரபலமாவது எப்படி என்பது குறித்து பட்டம் பெற்றிருப்பார் போல பவர் ஸ்டார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவரை பல்வேறு காரணங்களுக்காக திருமா விரட்டிவிட்டார்.
வெற்றி உறுதியாம்
அதற்கு பின்பு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திய பவர்ஸ்டாருக்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது. விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறும் பவர்ஸ்டார், தனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றும் என்றும் கூறியுள்ளார்.
வளைய வரும் கும்பல்
பவரை உசுப்பிவிட்டு பணம் பார்க்க ஒரு கும்பல் வளையவருகிறது என்றும், அது புரியாமல் அவர் தேர்தல் களத்தில் குதிக்கிறார் எனவும் சினிமாதுறையை சேர்ந்த முக்கிய பிஆர்ஓ ஒருவர் கூறினார்.