Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சகோதரரை அழைத்து பேசுவாரா சசிகலா...? அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் திவாகரன்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா தன்னை அழைத்து பேசாவிட்டால் தாம் நடத்தும் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையவும் தயாராகிவிட்டார் மன்னார்குடி திவாகரன்.

தினகரன் -திவாகரன் இடையே இருந்து வரும் பிரச்சனை தினகரனின் மகள் திருமணத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் முற்றியுள்ளது.

முன்னாள் அமைச்சர் காமராஜ், தனது அரசியல் குருவான திவாகரனை அதிமுகவில் ஐக்கியமாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார்.

சசிகலா தம்பி

சசிகலா தம்பி

சசிகலாவின் கடைசி சகோதரரான திவாகரன் மன்னார்குடியில் வசித்து வருகிறார். ஆரம்பக்காலத்தில் ஜெயலலிதாவுக்கு காவல் அரணாக விளங்கிய அவர், ஜெ.ஜெ. செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று வந்தார். ஒரு கட்டத்தில் நேரடி அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி கோயில் -கும்பாபிஷேகம், கல்லூரி என நிம்மதியான வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். அக்கா சசிகலா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு முழு ஆதரவாக நின்றார்.

பாச வட்டம்

பாச வட்டம்

மகன் ஜெயானந்தை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு அனுப்பி அக்காவிடம் உடல்நலம் குறித்தெல்லாம் கேட்டறிந்து வந்தார் திவாகரன். இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. சசிகலா யார் பக்கம் நிற்பார் என மன்னார்குடி உறவுகள் ஆவலோடு எதிர்நோக்கியது. சசிகலாவோ தனது அக்காள் மகனான தினகரன் பக்கமே நின்றார். தம்பி திவாகரன் மீது சினம் கொண்டு அவரை தனது பாச வட்டத்தில் இருந்து சற்று ஒதுக்கி வைத்தார்.

போட்டியாக

போட்டியாக


தனது அக்காவிடமிருந்து தன்னை தினகரன் தான் பிரித்தார் என எண்ணிய திவாகரன், தினகரனுக்கு போட்டியாக அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் எதிர்பார்த்தப்படி அந்தக் கட்சியால் தமிழக அரசியலில் சோபிக்க முடியவில்லை. இதனிடையே சசிகலா விடுதலைக்கு பிறகு எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் குடும்ப உறவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாடல்

சாடல்

அதற்கேற்ப தினகரனின் மகள் திருமணத்தில் திவாகரன் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் செப்டம்பர் 16-ம் தேதி தினகரன் மகள் திருமணம் நடந்த அன்று அதில் கலந்துகொள்ளாமல், அன்றைய தினமே மன்னார்குடி அருகே உள்ள கோயில் விழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் காமராஜுடன் திவாகரன் கலந்துகொண்டார். அப்போது காமராஜுடன் மனம் விட்டு பேசிய திவாகரன், தினகரனின் செயல்பாடுகள் பற்றி சாடியிருக்கிறார்.

 அடுத்தக்கட்டம்

அடுத்தக்கட்டம்

இதையடுத்து திவாகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க விரும்பிய முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிசாமியிடம் காய் நகர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இன்னும் ஒரு மாதத்திற்குள் சசிகலா தன்னை அழைத்து எப்படியும் பேசுவார் என்று நம்பும் திவாகரன், ஒரு வேளை அக்கா அழைக்காவிட்டால், தனது அடுத்தக் கட்ட நடவடிக்கையை அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னெடுப்பார் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+