ஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்!
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு ஒரே தலைமைதான் வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறிய நிலையில் அவரது பேச்சு குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் கருத்து கூறியுள்ளார்.
மதுரையில் இன்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்றும் அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை என்றும் ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார். மேலும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியிருந்தார்.

ஓபிஎஸ் பதில்
அவரது கருத்து கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜன் செல்லப்பாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை. பேட்டியை முழுமையாக பார்த்த பின்னர் கருத்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

சொந்தக்கருத்து
இதனிடையே ராஜன் செல்லப்பா கருத்து அவருடைய சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் விமர்சனத்தை அதிமுகவினரின் கருத்தாக எடுக்க முடியாது.

பதவிகாலத்தை நிறைவு செய்யும்
அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டு பதவிக்காலத்தை அதிமுக ஆட்சி நிறைவு செய்யும் என நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு கூறினார்.

கேபி முனுசாமி கருத்து
இதேபோல் ராஜன் செல்லப்பா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் கருத்து அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications