ஓய்வூதியம் சரி.. இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறுங்க: திருமாவளவன் வைத்த கோரிக்கை
சென்னை: "சமவேலை - சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்" என தமிழக அரசை விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இந்தநிலையில் அவர்களில் 996 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசின் உத்தரவுகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலை - சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கைது செய்யப்பட்ட 996 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் ஆசிரியப் பெருமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்பதுடன், அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள அறிக்கையின் படி, ஆறாவது ஊதிய குழவில் நேர்ந்த ஊதிய முரண்களைக் களைந்து சம ஊதியம் வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். ஜனநாயகப் பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்
பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications