கல்யாணத்துக்கு போய்விட்டு வீடு திரும்பிய தம்பதி.. வேகமாக மோதிய லாரி.. மனைவி பரிதாப மரணம்
சென்னை அருகே லாரி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: கல்யாணத்துக்கு போய்விட்டு வந்து கொண்டிருந்த தம்பதி மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில், கணவன் கண்முன்னேயே மனைவியின் தலைநசுங்கிய கொடூரம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி உமா. இவர்களது சொந்தக்காரர் ஒருவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கல்யாணம் நடந்தது.
அந்த கல்யாணத்துக்கு சென்றுவிட்டு பைக்கில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, சித்தாலப்பாக்கம் ஜங்ஷன் அருகே வந்தபோது, பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டனர்.
அந்த சமயத்தில், ஒரு தண்ணீர் லாரி வேமாக வந்து கொண்டிருந்தது. வந்த வேகத்திலேயே பைக் மீது மோதிவிட்டது. இதில் லாரியின் சக்கரம், உமாவின் தலையில் பலமாக ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தன் கண் முன்னாடியே மனைவி உயிரிழப்பதை கண்டு அலறி துடித்தார் கணவன்.
இதையடுத்து, தகவலறிந்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வரைந்து வந்து உமாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்ணி லாரி ஓட்டி வந்த செல்வக்குமாரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் .