சென்னை திருவொற்றியூர் ராஜலட்சுமிக்கு இப்படியா நடக்கணும்.. குக்கர் வெடித்து பறிபோன உயிர்.. சோகம்
சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே சமையல் செய்த போது குக்கர் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயத்துடன் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் அருகே சரவணநகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (வயது 55). இவர் வழக்கம் போல் இன்று காலையில் சமையல் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென குக்கர் வெடித்து சிதறியுள்ளது. இதில் சமையல் அறையில் நின்றுகொண்டிருந்த ராஜலட்சுமி மீதும் பட்டுள்ளது.

இதனால் வலி தாங்க முடியாமல் கத்தி அலறியுள்ளார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது படுகாயத்துடன் கிடந்த ராஜலட்சுமியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குக்கர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications