சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஒரகடம் பகுதியில் விபத்தில் சிக்கி பெண் உதவி ஆய்வாளர் பலியானார். அவருக்கு வயது 32.
இவர் கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

சென்னை புறநகரான படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில்(32) வாகன விபத்தில் சிக்கி இன்று மதியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவராகும். அதற்கு முன்பாக, ஆர்9வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரிந்தவர்.
மாங்குயில் தனது டூவீலரில் ஒரகடம் நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications