சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman prisoner commits suicide in Puzhal prison

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் காந்திமதி. இவருக்கு வயது 50.

இவரை புழல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன் வராததால் மனமுடைந்த காந்திமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சிறை காவலர்கள் காந்திமதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புழல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+