எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்.. சட்டப்பேரவையை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம்.. வைகைச்செல்வன்!
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாம் தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நாளை தொடங்கவுள்ளது. இதனிடையே சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் செயல்பட்டு வருகிறாா். அவா் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் துணைத் தலைவராக ஆா்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி பல முறை கடிதம் கொடுத்துள்ளாா்.

சபாநாயகர் முடிவு என்ன?
அதேபோல் ஓ.பன்னீா்செல்வமும் அதிமுக தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், எங்களை ஆலோசித்தே எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவா் அப்பாவு இன்னும் அவரின் முடிவை அறிவிக்கவில்லை.

எம்எல்ஏ-க்கள் பலன்
இந்த நிலையில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்களின் பலம் 66 ஆக உள்ளது. இதில் தனியாகச் செயல்பட்டு வரும் ஓ பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 எம்எல்ஏ-க்கள் தவிர இதர எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவுள்ளனா்.

இபிஎஸ் புறக்கணிப்பு?
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் முன் வரிசையில் அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்படும். அதனால், ஓபிஎஸ் அருகே இபிஎஸ் அமர விரும்பாததுடன், அதிமுகவின் சாா்பில் ஓபிஎஸ் பேரவையில் இடம்பெறுவதையும் அவா் விரும்பாமல் இருந்து வருகிறாா். இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி பேரவையை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகை செல்வன் பேட்டி
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கவேண்டும். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேவேளையில், சபாநாயகர் பெரும்பான்மை முடிவின்படி நியாயமாக நடக்கவேண்டும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. இதில் திமுக அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டப்பேரவையை புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications