விசா இருந்தால்தான் இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் போக முடியும்.. இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். ஆனால் ரயில் நிலையத்திற்குள் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எளிதாக சென்றுவிட்டு வரலாம். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் அபராதம் போடப்படும். ஆனால், இதையெல்லாம் தாண்டி, இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் விசா கட்டாயம் தேவைப்படும். இந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. பொதுவாக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அல்லது பயண டிக்கெட் வைத்து இருக்க வேண்டும்.

punjab weird trend

இல்லையென்றால் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கினால் அபராதம் கட்டிவிட்டுத்தான் வர வேண்டும். இது இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பொதுவான நடைமுறைதான். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா தேவை.. விசா இல்லையென்றால் இந்த ரயில் நிலையத்திற்குள் நீங்கள் செல்லவே முடியாது.

விமான நிலையத்திற்கு கூட விசா, பாஸ்போர்ட் இல்லாமல் போகலாம்.. ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்ல விசாவா? என நீங்கள் நினைக்கலாம்.. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. விசா இல்லாமல் செல்ல முடியாத ரயில்வே நிலையம் இந்தியாவில் எங்கு உள்ளது? அதற்கு காரணம் என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ளது அட்டாரி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில், அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் வாகா எல்லை வரை ரயில் இயக்கப்படுகிறது. அமிர்தசரஸ் - லாகூர் லைனில் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் அட்டாரிதான். எனவே அட்டாரி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா அவசியம்.

விசா இல்லாமல் இந்த அட்டாரி ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாது.அதாவது பாகிஸ்தான் செல்வதற்கான விசா பெற்று இருக்க வேண்டும். இந்த விசா இன்றி யாரேனும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த ரயில் இருக்கும். பாகிஸ்தானின் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் இடமும் இந்த அட்டாரி ரயில் நிலையம்தான். தற்போது இந்த ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு இந்த சேவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அட்டாரி ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்து இருப்பதால் எப்போதுமே பதற்றம் நிறைந்த இடமாகும். இரு நாடுகளுக்கும் இந்த ரயில் நிலையம் வழியாக செல்ல முடியும் என்பதால் பாதுகாப்பு படையினரின் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+