Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியை என்னுடன் அனுப்பாவிட்டால் ஆசிட் வீசுவேன்; கணவருக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டிய இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொருக்குப்பேட்டையில் தன்னுடன் பழகி மீண்டும் மனம் திருந்தி கணவனுடன் சென்று வசித்த பெண்ணை தன்னுடன் மீண்டும் அனுப்பாவிட்டால் ஆசிட் வீசுவேன் என மிரட்டிய இளைஞட், கணவருக்கு தனிமையில் இருந்த ஆபாச படத்தையும் அனுப்பி மிரட்டல் விடுத்த நிலையில் மனைவி அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தவறான நட்பால் கணவனை பிரிந்த மனைவி
சென்னை, கொருக்குப்பேட்டை, ரங்க நாதபுரம், அவுசிங் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (29),எம்.சி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜானகி(24), என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன.

 Youth arrested for threatening to kill by throwing acid

கொருக்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் வினோத்(33). இவருக்கும் ஜானகிக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்தவர்கள் பிரச்சினை பெரிதானதால் வினோத்துடன் ஜானகி ஓடிவிட்டார். கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் வினோத்துடன் வசித்து வந்தார்.

மீண்டும் கணவனிடமே திரும்பிய மனைவி
பழக பழக பாலும் புளிக்கும் என்பதுபோல் வினோத்துக்கு ஜானகி புளித்துப்போனார், வேறு பெண்களை நாட ஆரம்பித்தார். வினோத்தின் நடவடிக்கை பிடிக்காமல், ஜானகி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், தான் திருந்தி விட்டதாக கூறி, கணவரிடம் திரும்பி வந்தார், கணவரும் மனம் திருந்தி வந்த மனைவியை பிள்ளைகளுக்காக ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், வினோத், தான் தனிமையில் இருந்த சில ஆபாச காட்சிகளை, பழனிசாமியின் செல்போனுக்கு அனுப்பி, உன் மனைவி ஜானகியை என்னுடன் அனுப்பிவை என மிரட்டியுள்ளார். மேலும், பழனிசாமியின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி ஜானகியின் கையைப்பிடித்து இழுத்து, தன்னுடன் வரவில்லை என்றால். முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியுள்ளார்.

மனைவியை என்னுடன் அனுப்பி வை, ஆபாச படங்களை அனுப்பிய கள்ளக்காதலன்

மனம் திருந்திய தான் கணவருடன் சேர்ந்து வாழ்வதை பிடிக்காமல், கள்ளக்காதலன் வினோத் ஆபாசப்படங்களை அனுப்பி மிரட்டுவது, வீட்டில் வந்து தகராறு செய்வது, ஆசிட் ஊற்றிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக ஜானகி கொடுத்த புகாரின் பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் ,வினோத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+