சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சால் கோவை போலீஸ் நடவடிக்கை
சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசியதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கோவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபராக வலம் வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது ஒரு யூடியூப் சேனலில் பெண் காவலர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்தனர்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதோடு அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பிறகு பல்வேறு புகார்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது சென்னை, சேலம், திருச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது 7 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது அவர் மீண்டும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரால் புதிய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவருடன் பேசினார். அப்போது அவர் முத்துராமலிங்க தேவர் குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.
இதையடுத்து முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை கோரி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவதூறாக பேசுதல், இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சவுக்கு சங்கரை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்ற கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்ததற்கான ஆவணங்காளை காட்டி சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்தனர். அதன்பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications