ஆர்டர் எடுத்தவர் இனி ஆர்டர்களில் கையெழுத்து போடுவார்.. TNPSC தேர்வில் வெற்றி பெற்ற சொமேட்டொ ஊழியர்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஊழியர் விக்னேஷுக்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சொமேட்டோவில் ஃபுட் ஆர்டர்களை எடுத்தவர் இனி அரசாங்க ஆர்டர்களில் கையெழுத்து போட இருக்கிறார்.
குடும்பச் சூழல் காரணமாக படிப்பை விட்டுவிட்டோ, படிக்கும்போது பார்ட் டைமாகவோ பல்வேறு பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் ஏராளம். ஸ்விக்கி, சொமேட்டோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளங்கள் பெருகிவிட்ட பிறகு ஏராளமான இளைஞர்கள், டெலிவரி பாய் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் ஏராளமானோர், நகரங்களில் இருந்தபடி தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடிக்கொண்டே, ஃபுட் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பலரும், தங்கள் செலவுக்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஆப்பில் டெலிவரி பாயாக உழைத்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ். இவர் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இரவும், பகலும் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தங்கள் ஊழியர், மதிப்புமிக்க தேர்வுல் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக சொமேட்டோ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. சொமேட்டோவில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளது.
அதோடு, சொமேட்டோ ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏராளமான நெட்டிசன்கள் விக்னேஷுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோவில் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்தவர், இனி இந்த அரசுப் பணி மூலம் ஆர்டர்களில் கையெழுத்து போடப்போகிறார் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்தவகையில் சுமார் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு விஏஓ, வரி வசூலிப்பாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications