ஆர்டர் எடுத்தவர் இனி ஆர்டர்களில் கையெழுத்து போடுவார்.. TNPSC தேர்வில் வெற்றி பெற்ற சொமேட்டொ ஊழியர்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஊழியர் விக்னேஷுக்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சொமேட்டோவில் ஃபுட் ஆர்டர்களை எடுத்தவர் இனி அரசாங்க ஆர்டர்களில் கையெழுத்து போட இருக்கிறார்.
குடும்பச் சூழல் காரணமாக படிப்பை விட்டுவிட்டோ, படிக்கும்போது பார்ட் டைமாகவோ பல்வேறு பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் ஏராளம். ஸ்விக்கி, சொமேட்டோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளங்கள் பெருகிவிட்ட பிறகு ஏராளமான இளைஞர்கள், டெலிவரி பாய் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் ஏராளமானோர், நகரங்களில் இருந்தபடி தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடிக்கொண்டே, ஃபுட் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பலரும், தங்கள் செலவுக்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஆப்பில் டெலிவரி பாயாக உழைத்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ். இவர் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இரவும், பகலும் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தங்கள் ஊழியர், மதிப்புமிக்க தேர்வுல் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக சொமேட்டோ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. சொமேட்டோவில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளது.
அதோடு, சொமேட்டோ ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏராளமான நெட்டிசன்கள் விக்னேஷுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோவில் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்தவர், இனி இந்த அரசுப் பணி மூலம் ஆர்டர்களில் கையெழுத்து போடப்போகிறார் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்தவகையில் சுமார் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு விஏஓ, வரி வசூலிப்பாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications