கோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி? புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்
கோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சந்தோஷ்குமாரின் பாட்டி மரணமும் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், பாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பன்னிமடையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று இன்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், சிறுமியை கொடூரமாக கொன்று இருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கோவையில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருவது ஒரு காரணம். காவல் துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது. காவல் துறையின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.
சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே கைது செய்து , மற்றவர்களை காப்பாற்ற காவல் துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்வர்களையும் கைது செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும். பன்னிமடை பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்த அவர்,
அரசாங்கம் , குடும்பத்தினருக்கு ஒரு கோடி அளிக்க வேண்டும் . குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் . அவருடைய சகோதரியின் கல்விக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications