கோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி? புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்
கோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சந்தோஷ்குமாரின் பாட்டி மரணமும் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், பாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பன்னிமடையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று இன்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், சிறுமியை கொடூரமாக கொன்று இருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கோவையில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருவது ஒரு காரணம். காவல் துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது. காவல் துறையின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.
சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே கைது செய்து , மற்றவர்களை காப்பாற்ற காவல் துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்வர்களையும் கைது செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும். பன்னிமடை பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்த அவர்,
அரசாங்கம் , குடும்பத்தினருக்கு ஒரு கோடி அளிக்க வேண்டும் . குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் . அவருடைய சகோதரியின் கல்விக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications