19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்
கொச்சி: இந்திய கடற்படை கப்பல் ஜலாஷ்வா, மாலத்தீவின், மாலேவிலிருந்து கொச்சிக்கு 698 இந்தியர்களுடன் பயணத்தை இன்று நள்ளிரவு துவங்கியுள்ளது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, மாலத்தீவுகள், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக வியாழக்கிழமை தொடங்கியது, 'வந்தே பாரத் மிஷன்'. இதன் ஒரு பகுதியாக போர்க் கப்பல்களும் பயன்படுத்தப்படுகிறது.

"மொத்தம் 595 ஆண்களும் 103 பெண்களும் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவில் பயணிக்கிறார்கள். அதில் 19 பெண்கள் கர்ப்பிணிகள்." என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பேக்கேஜ் கிருமிநாசினி நிலையங்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் வரவேற்பு மேசைகள் அமைக்கப்பட்டன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கப்பல் பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் வயது மற்றும் மருத்துவத் தேவைகளையும் முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் பரிசீலித்தனர்.
ஏர் இந்தியா மே 7 முதல் மே 14 வரை 64 சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வருகிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்களை, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 12 நாடுகளில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்கும், மூன்று கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும். "வந்தே பாரத் மிஷன்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், தலா 11 விமானங்கள் தமிழகம் மற்றும் டெல்லிக்கும், தலா 7 மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கும் செல்லும்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications