19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்
கொச்சி: இந்திய கடற்படை கப்பல் ஜலாஷ்வா, மாலத்தீவின், மாலேவிலிருந்து கொச்சிக்கு 698 இந்தியர்களுடன் பயணத்தை இன்று நள்ளிரவு துவங்கியுள்ளது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, மாலத்தீவுகள், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக வியாழக்கிழமை தொடங்கியது, 'வந்தே பாரத் மிஷன்'. இதன் ஒரு பகுதியாக போர்க் கப்பல்களும் பயன்படுத்தப்படுகிறது.

"மொத்தம் 595 ஆண்களும் 103 பெண்களும் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவில் பயணிக்கிறார்கள். அதில் 19 பெண்கள் கர்ப்பிணிகள்." என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பேக்கேஜ் கிருமிநாசினி நிலையங்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் வரவேற்பு மேசைகள் அமைக்கப்பட்டன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கப்பல் பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் வயது மற்றும் மருத்துவத் தேவைகளையும் முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் பரிசீலித்தனர்.
ஏர் இந்தியா மே 7 முதல் மே 14 வரை 64 சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வருகிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்களை, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 12 நாடுகளில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்கும், மூன்று கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும். "வந்தே பாரத் மிஷன்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், தலா 11 விமானங்கள் தமிழகம் மற்றும் டெல்லிக்கும், தலா 7 மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கும் செல்லும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications