கேரளாவில் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை.. கடைசியில் காத்திருந்த பெரிய ஷாக்
கொச்சி: கேரள மாநிலம் கண்ணூர் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரட்டத்தோடு பகுதியில் பாவலிப் புழா ஆற்றில் தடுப்பணை ஒன்று உள்ளது. சுங்ககுன்னு, ஒட்டப்லா பகுதியைச் சேர்ந்த லிஜோ ஜோஸ் (36) மற்றும் அவரது மகன் நெவின் (6) ஆகியோர் நேற்று முன்தினம் காலை குளிக்க சென்று இருக்கிறார். மாணவர் நெவின் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார்.

இருவரும் பாவலிப் புழா ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து வந்த நிலையில், லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார்.
அப்போது, சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அவரை மீட்க சென்ற தந்தையும் சிக்கி உள்ளார்.
இந்த விபத்தில் இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லிஜோ ஜோஸின் மனைவி ஸ்டெபனா குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷிவானியா என்ற நான்கு வயது மகள் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications