ஸ்டீம் ஃபேசியல்.. வெந்துபோன 17 வயது கோவை சிறுவன் முகம்! போலீஸுக்கு போன பெற்றோர்
கோவை: கோவை மாவட்டத்தில் அழகு நிலையத்தில் நீராவி பிடித்த போது அங்கிருந்த ஊழியரன் அஜாக்கிரதையால் வெந்நீர் பட்டு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டதாக 17 வயது மாணவர் புகார் கூறியுள்ளார்.
Recommended Video
கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர். இவர் அங்குள்ள ராக் மென்ஸ் சலூன் என்ற ஆண்கள் அழகு நிலையத்திற்குச் சென்றார். இந்த கடையை சஞ்சய் தாஸ் நடத்தி வருகிறார்.
இவரது கடையில் வித்யாதரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு கடந்த 13 ஆம் தேதி 17 வயது சிறுவன் ஃபேசியல் செய்வதற்காக வந்துள்ளார்.

சிகிச்சை
இந்த சிகிச்சை முகத்தில் இறந்த செல்களை அப்புறப்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும். அப்போது கவனக்குறைவால் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் அந்த மாணவனின் முகத்தில் பட்டதால் வெந்தது. இதனால் மாணவன் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த ஊழியர் வித்யாதரன் இயந்திரத்தை நிறுத்தினார்.

கடை உரிமையாளர்
கடை உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். அப்போது சாதாரண மருந்தை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மேலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் அதற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் உரிமையாளர் உறுதி அளித்திருந்தார்.

முகத்தில் காயம்
பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு முகத்தில் காயம் அதிகமானதை அடுத்து பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்கான பணத்தை உரிமையாளரிடம் கேட்ட போது அவர் கொடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது. சிறுவனின் தந்தையிடம் போனில் கொடுப்பதாக கூறிவிட்டு மறுத்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம்
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது விசாரணை நடத்தினர் மேலும் அந்த மாணவனின் பெற்றோர் கோவை மாநகர துணை ஆணையரிடம் புகார் கொடுத்தனர். ஆர்.எஸ்.புரம் போலீஸார் கடை உரிமையாள் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications