கோவையில் சிக்கிய நடிகை.. யார் அந்த சென்னை சினேகாஸ்ரீ.. வில்லங்க வேலை செய்யும் மேஜர் நெட்வர்க்
கோவை: இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்த புகாரில் துணை நடிகை, நடிகர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கோவை போலீசார் தீவிரமாக ரோந்து நடத்தி வருகிறார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களை குறிவைத்து அடிக்கடி வாகன சோதனையும் நடத்துவார்கள். அந்த வகையில் கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கும்பலிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் யார் என்பது குறித்தும், இது எப்படி வந்தது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த யாசிக் இலாஹி (வயது 26), போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்த மரியா (31), கரும்புக்கடை சாரமேடு திப்புநகரை சேர்ந்த முஜிப் ரகுமான் (27), ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பூச்சி கிருஷ்ணன்(24), சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சினேகாஸ்ரீ(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஐந்து பேரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தார்கள். இவர்களில் மரியா என்பவர் சினிமா துணை நடிகையாகவும், யாசிக் இலாஹி துணை நடிகராக இருப்பது தெரியவந்தது.
கைதான 5 பேரிடம் போதை பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்து நடத்திய விசாரணையில் போதை மருந்து கடத்தலில் கோவையை சேர்ந்த அப்துல் கலாம், ஆசிப் ஷெரீப், ரிஸ்வான், வட மாநிலத்தை சேர்ந்த சச்சின் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைதான கும்பல் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து அதனை போதை மாத்திரைகளாக கூடுதல் விலைக்கு விற்றுவருவது தெரியவந்தது. மேலும் இவர்கள் கஞ்சா கும்பலுடனும் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் மூலம் கஞ்சா பெற்று, அதனையும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் யார் என்பதும் அந்த நெட்வொர்க் குறித்தும் தற்போது விசாரித்து வருகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications