கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த இரண்டு நாள் தான்..மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் சொத்து வரியை வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சொத்து வரியை உரிய காலத்தில் வசூலிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மாநகராட்சிகள் சார்பில் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி சொத்துவரியை வசூலிக்க முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

5 percent incentive for property tax payers in Coimbatore: Corporation super notification

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "2023-24ம் நிதியாண்டில் 2வது அரை ஆண்டுக்கான சொத்து வரியை வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகைகளை செலுத்த வேண்டும்.

இதற்கு வசதியாக இன்று (சனிக்கிழமை) நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 56 மற்றும் 57வது வார்டுகளுக்கு ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்தில் 2 நாட்களும், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 34 வார்டுக்கு மஞ்சீஸ்வரி காலனி விநாயகர் கோவில் வளாகத்தில் நாளை மட்டும் முகாம் நடத்தப்படும்.

39வது வார்டு கண்டப்பாளையம் பெருமாள் கோவில் வளாகத்தில் இன்றும், 75வது வார்டு சீரநாயக்கன் பாளையம் நேதாஜி சாலை மாரியம்மன் கோவில் வளாகத்தில் 2 நாட்களும் வரி வசூல் முகாம் நடைபெறும். தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 93வது வார்டு சர்ச் வீதி மாநகராட்சி சமுதாய கூடத்தில் மற்றும் 99வது வார்டு ஸ்ரீராம் நகர்,6வது வீதியில் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறுகிறது.

வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு ஜனதா நகர் ஆரம்ப பள்ளியிலும், 28வது வார்டு இளங்கோ நகரில் மாநகராட்சி வார்டிலும், 25வது வார்டு காந்திமாநகர் உயர்நிலைப்பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடத்தப்படுகிறது.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 32 வது வார்டு நாயராணசாமி வீதியிலும், 63வது வார்டு பெருமாள் கோவில் வீதியிலும், 80வது வார்டுகெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறும்.

இந்த முகாம்கள் மற்றும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+