கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி
Recommended Video
கோவை: கோவையில் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகிவிட்டனர்.
தமிழகம், புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை கொட்டி வருகிறது. இது கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இருதினங்களாக நாகை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இன்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

17 பேர்
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்தனர்.

இரு குழந்தைகள்
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 17 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

17 பேர் பலி
அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக மழை
கோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரங்களில் அதிக மழையும் பெய்து வருகிறது. அதிலும் நேற்று மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறவினர் வீட்டில்
இடிந்து விழுந்த 4 வீடுகளில் மொத்தம் 10 பேர் மட்டுமே இருந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியில் கனமழை பெய்ததால் அங்கிருந்த சிலர் இந்த 4 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உறவினர்கள் என்பதால் அவர்களும் அந்த வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்கள் யார்
சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களில் அடையாளம் தெரிந்தது. அவர்கள் குரு (45), அரிசுதா (16), ராம்நாதன்(20), அட்சயா(7), லோகுராம்(7), ஓவியம்மாள்(50), நதியா(30), சிவகாமி(50), நிவேதா(20), வைதேகி(22), ஆனந்தகுமார்(46), திலாகவதி(50), அருக்கணி(55), ருக்குமணி(40), சின்னமாள்(70) உள்பட 17 பேர் பலியாகினர். 17 பேருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications