கோவை காங்கிரஸ் மோதல் விவகாரம்.. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு
கோவை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால். இவர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 17 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக கோவை காங்கிரஸ் கமிட்டியினர் இரண்டு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றிருந்தனர்.

தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐஎன்டியூசி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் சென்றிருந்தார்கள். கோவை காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மயூரா ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவையில் காங்கிரஸ் கட்சி வளரும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த மோதல் காங்கிரஸ் தலைமை வரை சென்றும் தீர்ந்தபாடில்லை. வேணுகோபாலை வரவேற்க சென்ற இடத்திலும் மோதல் வெடித்துள்ளது. இரண்டு தரப்பினரும் வேணுகோபாலிடம் மாறி மாறி புகார் தெரிவித்துள்ளனர்.
அவர் முன்பே இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வேணுகோபால் இருவருக்கும் அறிவுரை சொல்லி கிளம்பிவிட்டார். அப்போது மயூரா ஜெயக்குமார் மற்றும் கோவை செல்வம் இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கு முயற்சித்தனர்.
இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த நிலையில், கோவை செல்வம் மயூரா ஜெயக்குமார் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கட்சி நிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழலில் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications