விடிய விடிய பலாத்காரம்.. கொலை செய்து புதைத்தார் திருநாவுக்கரசு.. புதிய ஆடியோவால் பரபரப்பு
Recommended Video

கோவை: பொள்ளாச்சியில் திருநாவுக்கரசும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை விடிய விடிய பலாத்காரம் செய்ததால் உயிரிழந்த அந்த பெண்ணின் சடலத்தை பண்ணை வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக புதிய ஆடியோவில் ஒரு பெண் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கதற கதற பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அந்த பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் உறவு கொள்வதும் பணம் பறிப்பதும் இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. இதையடுத்து புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்து அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸில் ஒப்படைத்தனர்.

வாக்குமூலம்
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் மட்டும் இதுவரை 60 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து வீடியோ எடுத்து வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்
இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் அனுப்பப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புது பெண் குரல்
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு பெண் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் நான் திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்டவள். அவருடன் மொத்தம் 8 பேர் உள்ளனர். இவர்கள் பெண்களை மயக்கி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்வதே வேலையாகும்.

விடிய விடிய பலாத்காரம்
அவ்வாறு நாங்கள் 4 பெண்கள் ஏமாந்து பண்ணை வீட்டில் இருந்த போது ஒரு சிறிய பெண்ணை அழைத்து வந்து அந்த பெண்ணை விடிய விடிய பலாத்காரம் செய்ததால் வலி தாளமுடியாமல் அந்த பெண் இறந்துவிட்டார்.

பண்ணை வீட்டில் புதைத்த சம்பவம்
இதையடுத்து அந்த 8 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பண்ணை வீட்டுக்கு பின்புறமாக புதைத்து விட்டனர். இதை வெளியே சொல்லக் கூடாது என எங்களையும் மிரட்டினர். எப்படியோ நாங்கள் 4 பேரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்தோம். இந்த உண்மையை உங்களால் முடியும் வரை பகிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications