வச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி
Recommended Video

கோவை: பாகிஸ்தானுக்குள், தீவிரவாதிகளை அழிப்பதற்காக குறி வைத்த இலக்கை இந்திய விமானப்படை வெற்றிகரமாக தகர்த்துவிட்டது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.
கோவை அடுத்த சூலூர் விமானப்படை தளபதி தனோவா இன்று மதியம்,12.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

விமானி, அபிநந்தன் பயன்படுத்திய மிக் 21 பைசன் வகை விமானம் பழமையானது கிடையாது. அது அப்டேட் செய்யப்பட்டது. இதில் சிறந்த ரேடார் சிஸ்டம், விண்ணிலேயே இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. எனவே எந்த ஒரு போர் விமானத்தையும், மிக் 21 பைசன் எதிர்த்து நிற்கும் திறன் கொண்டதுதான்.
எனவேதான் பாகிஸ்தானின் நவீனமான எப் 16 போர் விமானத்திற்கு எதிராக மிக் -21 பைசன் பயன்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளின் முகாம்களை சரியாக நமது போர் விமானங்கள் தாக்கி அழித்து உள்ளதாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. முகாம்களில் எத்தனை தீவிரவாதிகள் இருந்தனர் என்பதை கணிக்க முடியும். ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பாக விமானப்படை கணக்கிட முடியாது. இலககு சரியாக குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்திய விமானப்படை சரியாக தாக்கியதால்தான் இப்போது பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்தியா, எங்கோ காட்டுக்குள் குண்டு வீசியிருந்தால் பாகிஸ்தான் நம்மை தாக்க முயற்சிக்க வேண்டிய தேவையே கிடையாதே.
இந்திய போர் விமானங்கள் இலக்கை சரியாக தாக்கவில்லை, என்று கூறுவோருக்கு அந்த விவரம் எங்கே இருந்து கிடைத்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவல்படி இந்திய போர் விமானங்கள் சரியான இலக்கை தாக்கி அழித்து விட்டு திரும்பியுள்ளன.
வரும் செப்டம்பர் மாதம் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications