நீட் தேர்வின் போது தாலியை கழற்ற சொன்னார்களே.. அண்ணாமலை அமைதி காத்தது ஏன்? அன்பில் மகேஷ் பதிலடி!
கோவை: நீட் தேர்வின் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டும் என்று சொன்ன போது அண்ணாமலை அமைதி காத்தது ஏன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை மாற்றி மாற்றி பேசக் கூடாது என்று கூறிய அன்பில் மகேஷ், பள்ளிகளில் அறிவு சார்ந்த விஷயங்களை மட்டும் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த கோயில் விழா ஒன்றில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஒரு பெண் பொட்டு வைத்து கொண்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றால், அந்த பெண் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றுவார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் திருநீறு வைத்து கொள்ள வேண்டும், ருத்ராட்சம் போட்டு கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்.

கோவையில் அன்பில் மகேஷ்
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கோவை மாவட்ட கல்வித் துறை சார்பாக 'கற்றல் அடைவு' குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளியில் என்னென்ன செய்யப் போகிறோம்.
பள்ளிகளில் ஆய்வு
என்னென்ன பாடப்பிரிவுகளில் பின் தங்கியுள்ளோம், அதனை எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகள் பின் தங்கி இருக்கின்றன. ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணாமலை கருத்து பதில்
அதேபோல் எஸ்எஸ்ஏ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசு முதல் தவணையாக ரூ.700 கோடி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு வழக்கு போடப்படும் என்று கூறினார். தொடர்ந்து அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது.
பிற்போக்குதனம்
அதில் யாரின் தலையிடும் இருக்க கூடாது. பள்ளி என்பது அனைவருக்கும் பொதுவான இடம். பள்ளிகளில் அறிவுசார்ந்த விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதே அறிவுரையாக இருக்க வேண்டும். அதனை விடுத்து இதுபோன்ற விஷயங்களை பிற்போக்குதனம் என்று தான் கூறுவேன். மத நம்பிக்கைகளில் யாரும் தடையிடக் கூடாது.
நீட் தேர்வு விவகாரம்
ஆனால் பள்ளிகளில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று கூறினால், நீட் தேர்வு எழுதும் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே.. அப்போது அண்ணாமலை பேசுவாரா? அங்குன்றும், இங்கொன்றும் பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications