அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம்
கோவை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சென்டிமென்டாக அவிநாசி கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் வியூகங்களை வகுக்கிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள்.

கூட்டணி தொகுதி பங்கீடு
திமுக சுமார் 22 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்தளவுக்கு கட்சிகள் இணையவில்லை. இருக்கின்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
அதிமுக கூட்டணியில் பாஜக சுமார் 30 தொகுதிகளை எதிர்பார்க்கிறதாம். அதிமுக அவர்களுக்கு 25 தொகுதிகளை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாம். ஆனாலும் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
அவிநாசியில் எல். முருகன்
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறுகிறார். வடக்கு தொகுதியில் அவர் ஏற்கனவே பணிகளை தொடங்கிவிட்டார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடந்த முறை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்தமுறை அவர் அவிநாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
முருகன் நேற்று அவிநாசி காசி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அவர் அவிநாசி தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று உரையாடினார். அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் வழங்கவில்லை.
சிங்காநல்லூரில் அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2021 தேர்தலில் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடவதாக கூறப்பட்டது.
நேற்று மாலை கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள பாஜக நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி வீட்டிற்கு அண்ணாமலை சென்றார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. பாலாஜி உத்தமராமசாமி சிங்காநல்லூர் தொகுதி பாஜக பொறுப்பாளராகவும் இருந்தார்.
இதன்மூலம் அண்ணாலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்ணாமலை இதை உறுதி செய்யவில்லை. "தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்" என்று கூறினார்.
-
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications