கோவை அவிநாசி மேம்பாலம் பணியில் ட்விஸ்ட்.. தூண்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவு.. தாமதமாகும் திறப்பு
கோவை: கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஏறு தளம் அமைப்பதற்கான தூண்களை தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 தூண்களை இடித்துவிட்டு, திட்டமிட்ட இடத்தில் தூண்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
அவிநாசி மேம்பாலம்
தமிழ்நாட்டின் 2வது பெரிய நகரமாக கோவை மாவட்டம் விளங்கி வருகிறது. கோவை மாநகரில் மக்கள் தொகை நெருக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கோவையின் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். குறிப்பாக, அவிநாசி சாலையில் பீக் ஹவர்களில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்தப் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 95 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. ரூ. 1,621.30 கோடியில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. விமான நிலையம், ஹோப்ஸ் காலேஜ், நவ இந்தியா, போலீஸ் பயிற்சி மைதானம் முன்பு என, நான்கு இடங்களில் இறங்கு தளங்கள், ஏறு தளங்கள் அமைக்கப்படுகின்றன.
மேம்பாலம் திறப்பு
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து இந்த மாத இறுதியில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் கடைசியில் தான் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். அவிநாசி மேம்பாலத்தை, கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ தொலைவுக்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
அந்தப் பணிகளும் தொடங்கவில்லை. தற்போது மேம்பால பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து நெரிலை மேலும் அதிகரித்துள்ளது. அவிநாசி சாலையில் சிக்னலை தவிர்த்துவிட்டு நடைமுறையில் உள்ள யூடர்ன் முறையினாலும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் மேம்பாலம் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேம்பால தூண்கள்
ஆனால் அதில் மேலும் ஒரு சிக்க எழுந்துள்ளது. அவிநாசி சாலையில் தனியார் ஹோட்டலுக்கு சாதகமாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் மேம்பாலம் தூண்கள் எழுப்பியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ஏற்கனவே அமைத்தை திட்டத்தை மாற்றி, தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக திட்டத்தை மாற்றியமைத்ததாக புகார் எழுந்துள்ளது.
பாதுகாப்புதான் முக்கியம்
இந்த வழக்கை நீதிபதி பரத சக்ரவர்த்தி விசாரித்தார். 4 தூண்கள் திட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், "மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். தூண்களை இடம் மாற்றும்போது மேம்பாலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இங்கு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக 4 தூண்களை நகர்த்தியுள்ளனர்.
இடித்து அகற்ற உத்தரவு
எனவே அந்த தூண்களை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும். மேலும் அந்த 4 தூண்களை ஏற்கனவே வடிவமைத்தபடி, 30 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் தங்கள் சொந்தப் பணத்தில் தலா ரூ.1,000 முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் "என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேம்பாலம் திறப்பு மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?












Click it and Unblock the Notifications