12 ரூபாய்தான் இருக்கு.. புயல் நிவாரண நிதியா வாங்கிப்பீங்களா.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்
கஜா புயல் நிவாரணத்துக்கு 12 ரூபாய் தந்திருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர்.
Recommended Video

கோவை: "என்கிட்ட 12 ரூபாதான் இருக்கு.. வாங்கிப்பீங்களாயா?" என்று கேட்டு புயல் நிவாரண தொகையாக கொடுத்திருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர்.
தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் உதவிகளை செய்து வருகிறார்கள். தனியார் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், உட்பட எல்லாருமே நிவாரண பொருட்களை அனுப்பி சேகரித்து அனுப்புகிறார்கள்.
இப்படித்தான் மேட்டுப்பாளையத்திலும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து நிவாரண பொருட்களை திரட்டி கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டேண்டில் இதற்கெனவே ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. உதவ விரும்புவர்கள் யார் வேண்டுமானாலும், பணமோ, பொருளோ, சாப்பாடோ என முடிந்ததை கொண்டு போய் இந்த பந்தலில் உள்ள பொறுப்பாளர்களிடம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன வேண்டும்?
2 நாளுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு முதியவர் அந்த பக்கமாக வந்தார். பந்தல் போடப்பட்டு இருப்பதையும், எல்லாரும் உதவி கொண்டு வந்து தருவதையும் கொஞ்ச நேரம் நின்று பார்த்தார். உற்று பார்த்து கொண்டிருப்பதை கவனித்த அங்கிருந்தவர்கள், "ஐயா.. உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள்.

வாங்கிப்பீங்களாயா?
அதற்கு அந்த பெரியவர், "நான் ஒரு பிச்சைக்காரன். எனக்கு பிச்சை போட்ட பணத்தில் சாப்பிட்டு விட்டேன். இப்போ என்கிட்ட 12 ரூபாய்தான் இருக்கு. அதை புயல் பாதிச்சவங்களுக்கு தரணும்னு ஆசைப்படறேன். 12 ரூபாயை வாங்கிப்பீங்களாயா?" என்று கேட்டார்.

சில்லறை காசுகள்
இதை கேட்டதும், அங்கிருந்தவர்களுக்கு ரொம்பவும் நெகிழ்ச்சியாக போய்விட்டது. உடனே, "வாங்கிக்கறோம்.. கொடுங்கய்யா.." என்று சொல்லவும், பையில் வைத்திருந்த சில்லறை காசுகள் உட்பட 12 ரூபாயை பெரியவர் அவர்களிடம் தந்தார். அதன்பிறகு அவர் மெதுவாக அங்கிருந்து நகர தொடங்கினார்.

முதிர்ந்த வயது
அப்போதுதான் தெரிந்தது, அவர் முதிர்ந்த பிச்சைக்காரர் மட்டும் இல்லை.. அவர் ஒரு மாற்றுத் திறனாளியும்கூட என்று!! இருட்டில் மறையும் வரை எல்லோரும் அவரை பார்த்து கொண்டே சிலையாக நின்றார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications