Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு நாடு தேவை உள்ளது.. அரசின் செயல்பாடுகளை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு.. வானதி சீனிவாசன் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கொங்கு மண்டல வளர்ச்சி என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கொங்கு மக்களின் தேவைகளை அரசு எந்தளவு நிறைவேற்றித் தருகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். மநீம தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தவர்.

தேர்தலுக்குப் பின்னரும், அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் வானதி சீனிவாசன், கொங்கு நாடு குறித்துப் பரபரப்பு கருத்து முன் வைத்துள்ளார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

ஆடிட்டர் ரமேஷின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை தெற்கு எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குகின்றன. இருப்பினும், அதனைச் சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்த ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். இதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேக்சின் இருப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு அட்டவணையாக அளித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும்.

கோவை ஸ்மார்ட் சிட்டி

கோவை ஸ்மார்ட் சிட்டி

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்காகக் கோயில்கள்
இடிக்கப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாகக் கோயில்களை அழகுபடுத்தும் பணிகளை ஸ்மாட்ர் சிட்டி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்ய முடியாத இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகு, பணிகளைத் தொடர வேண்டும்.

கொங்கு நாடு

கொங்கு நாடு

கொங்கு நாடு விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. ஆனால் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி, தேவைகள் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களின் ஏக்கமாகவே உள்ளன. அதைப் புதிதாக மாநில அரசு உரிய முறையில் நிறைவேற்றித் தர வேண்டும். கொங்கு மக்களின் தேவைகளை அரசு எந்தளவு நிறைவேற்றித் தருகிறது என்பதைப் பொறுத்தே கொங்கு நாடு கோரிக்கை குறித்து அடுத்தகட்ட முடிவை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+