Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நில மோசடி புகாரில் சமரசம் செய்ய லஞ்சம்? முன்னாள் உதவி ஆணையர் மீது பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை: ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் நில மோசடி புகாரில் சமரசம் செய்து, அவர்கள் இழந்த முன்பணத்தை மீட்டுத் தருவதற்காக ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்றதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் மற்றும் இடைத்தரகர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க முயன்றால் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வைக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் இருக்கிறது. அதேநேரம் லஞ்சம் வாங்கியிருந்தாலும், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்றால் அந்த அதிகாரி மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய வைக்க முடியும். நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை.. நேராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தாலே நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். கோவையில் அப்படித்தான் ஒரு உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

Bribe offered to settle land fraud complaint in Coimbatore Case filed against adsp

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான நாகராஜன் மற்றும் நூருல்லா ஆகியோர் நிலம் வாங்குவதற்காக வழங்கிய ரூ. 2.42 கோடி முன்பணத்தை விற்பனையாளர்கள் திருப்பித் தர மறுத்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அப்போதைய உதவி ஆணையர் குணசேகரன், எதிர் மனுதாரரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர 10 சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டதாக புகார் எழுந்தது.

இதற்காக பிரவீன் என்ற தனியார் நபரை இடைத்தரகராகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. முதற்கட்டமாக மீட்கப்பட்ட தொகையிலிருந்து தனக்காக ரூ. 5 லட்சமும், இடைத்தரகருக்கு கமிஷனாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் புகார் அளித்தனர்.. அந்த புகாரில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடைத்தரகர் மூலம் ரூ. 4.40 லட்சத்தை குணசேகரன் பெற்றுக்கொண்டதாகவும், இடைத்தரகர் தனது கமிஷன் தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்குப் பெற்றதாகவும் கூறினார். இதனை விசாரணையில் உறுதி செய்தார்கள்

இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குணசேகரன் மற்றும் பிரவீன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளது கோவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+