கோவையில் நில மோசடி புகாரில் சமரசம் செய்ய லஞ்சம்? முன்னாள் உதவி ஆணையர் மீது பாய்ந்த வழக்கு
கோவை: ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் நில மோசடி புகாரில் சமரசம் செய்து, அவர்கள் இழந்த முன்பணத்தை மீட்டுத் தருவதற்காக ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்றதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் மற்றும் இடைத்தரகர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க முயன்றால் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வைக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் இருக்கிறது. அதேநேரம் லஞ்சம் வாங்கியிருந்தாலும், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்றால் அந்த அதிகாரி மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய வைக்க முடியும். நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை.. நேராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தாலே நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். கோவையில் அப்படித்தான் ஒரு உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான நாகராஜன் மற்றும் நூருல்லா ஆகியோர் நிலம் வாங்குவதற்காக வழங்கிய ரூ. 2.42 கோடி முன்பணத்தை விற்பனையாளர்கள் திருப்பித் தர மறுத்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அப்போதைய உதவி ஆணையர் குணசேகரன், எதிர் மனுதாரரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர 10 சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக பிரவீன் என்ற தனியார் நபரை இடைத்தரகராகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. முதற்கட்டமாக மீட்கப்பட்ட தொகையிலிருந்து தனக்காக ரூ. 5 லட்சமும், இடைத்தரகருக்கு கமிஷனாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் புகார் அளித்தனர்.. அந்த புகாரில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடைத்தரகர் மூலம் ரூ. 4.40 லட்சத்தை குணசேகரன் பெற்றுக்கொண்டதாகவும், இடைத்தரகர் தனது கமிஷன் தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்குப் பெற்றதாகவும் கூறினார். இதனை விசாரணையில் உறுதி செய்தார்கள்
இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குணசேகரன் மற்றும் பிரவீன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளது கோவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications