CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு
சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை வெளிப்படையாக எழுதி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணங்கள் குறித்த முழு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். ஆனால் உரிய விவரங்கள் அளிக்கப்படவில்லை.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதல் யாரும் உரிய முறையில் அவருக்கு விளக்கம் அளிக்கவில்லை. தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்படியே இரண்டரை ஆண்டு காலம் கடந்தது.
இதனால் லியாகத் அலி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். ஆணையத்தின் ஆணையர் விபிஆர் இளம்பரிதி விசாரித்து உடனடியாக உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் விபிஆர் இளம்பரிதி பிறப்பித்துள்ளார். அதில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார், சிபிஎஸ்இ, அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் நுழைவு வாயில்கள், இணையதளங்கள் மற்றும் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் வகுப்பு வாரியான கட்டண கட்டமைப்பை கட்டாயம் வெளியிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இது மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு குட்நியூஸாகும்.
அதுமட்டுமின்றி மனுதாரர் கேட்ட விவரங்களை உடனடியாக வழங்காததை ஆணையர் கண்டித்ததோடு, மனுதாரர் லியாகத் அலிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க பள்ளி கல்வித்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி உரிய விவரங்களை கொடுக்க மறுத்து மனுதாரரை அலைக்கழித்தது பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார். லியாகத் அலி கடந்த மூன்றரை ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக முறையான தகவல்களை பெற போராடி வந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications