கோவையில் 50 வயசு சவுமியா.. இவரெல்லாம் ஒரு பெண்ணா.. அத்தனை பேர் சொல்லியும் கேட்காத முரட்டுத்தனம்
கோவை: சென்னையில் கடந்த வருடம் 5 வயது சிறுமியை நாய் கடித்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி, அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வளர்க்கப்படும் நாய்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கோவையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.
சென்னையில் கடந்த மாதம் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது.. கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதானவர்கள் மாரியப்பனும், அவரது மனைவியும்.. சம்பவத்தன்று இரவு 2 பேரும் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த ராட்வீலர் நாய் மாரியப்பனுக்கு தொல்லை தந்துள்ளது.. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் மாரியப்பன் தட்டிக் கேட்டுள்ளார்..

நடுரோட்டில் பயத்தில் அலறிய வயதான தம்பதி
உடனே ஆத்திரமடைந்த கவியரசன், தன்னுடைய ராட்வீலர் நாயை ஏவி விட்டு, வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்திருக்கிறார்.. மாரியப்பனின் வேட்டியை இழுத்து அரை நிர்வாணமாக்கிவிட்டது.
அவர்கள் கதறுவதையும், அழுது புலம்புவதையும் கண்டு ரசித்துள்ளார். வயதான தம்பதியினரால் ஓடக்கூட முடியவில்லை.. அதனால் பயத்திலேயே அலறி கூச்சல் போட்டுள்ளனர்.. அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கவியரசனை கண்டித்திருக்கிறார்கள்.
ஆனால், தனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும், பிரபலமான வழக்கறிஞர்களை தெரியும் என்றெல்லாம் சொல்லி அவர்களையும் கவியரசன் மிரட்டியிருக்கிறார்..இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வைரலாகி சென்னைவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை சவுமியா
இதோ கோவையில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் பொன்வேல்.. இவருக்கு 33 வயதாகிறது.. இவருக்கு 5 வயதில் மேகாலினி என்ற மகளும், 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இவர்களது பக்கத்து வீட்டில் சவுமியா என்ற 50 வயது பெண், தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. சவுமியா தன்னுடைய வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இதற்கு 2 வருடங்களுக்கு முன்பேயே அந்த பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கடித்து குதறிய நாய்கள்
காரணம், இந்த நாய்கள் கடந்த 2023ம் ஆண்டு, அங்குள்ள பல பேரை கடித்து குதறிவிட்டதாம்.. எனவே, அப்பகுதிவாசிகள் சவுமியாவிடம் நாயை வளர்க்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். ஆனாலும், சவுமியா தன்னுடைய வீட்டில் தொடர்ந்து நாய்களை வளர்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 4ம் தேதி சிறுமி மேகாலினி தன்னுடைய வீட்டருகே விளையாடி கொண்டிருந்தாள்.. இதனை பார்த்த சவுமியா, சிறுமியை வேறு பக்கம் சென்று விளையாடுமாறு கூறியிருக்கிறார்.. ஆனால் சிறுமி தொடர்ந்து அங்கேயே விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சவுமியா, தன்னுடைய நாயை ஏவி சிறுமியை கடிக்க விட்டுள்ளார்.
கடுமையான காயம்
இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்திருக்கிறாள்.. அவரது கதறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி விட்டிருக்கிறார்கள்.. பிறகு, கடுமையாக காயமடைந்த மேகாலினியை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த பொன்வேல், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியாவை கைது செய்தனர். அத்துடன், அவரது மகன்கள் சூர்யா (23), சாந்தாராம் பிரகாஷ் (21) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சவுமியாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் தற்போது அடைத்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications