ஒரே ஒரு கையெழுத்துதான்.. தலையெழுத்தே மாறியது.. எஸ்ஐ ஆக இருந்தவர்.. இன்று ஏட்டாக மாறியது எப்படி?
கோவையில் ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்ததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை போட்டு ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்ததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். இவர் விபத்து இன்சூரன்ஸ் விவகாரத்தில் போலியாக மோசடி செய்யதாக குற்றச்சாட்டில் சிக்கி இன்று ஏட்டாக மாறி உள்ளார்.
அப்படி என்ன தவறு செய்தார், ஏன் எஸ்ஐ ஆக இருந்தவர் தற்போது ஏட்டாக மாறினார். என்பதை இப்போது பார்ப்போம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை. இது தெரிந்ததும் இன்சூரன்சை புதுப்பித்து, மணிமாறன் தான் பணியாற்றும் போலீஸ் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்குப்பதிவு செய்தாராம்.

இதனிடையே விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஆவணங்களை காணவில்லை என்ற சான்றிதழ்களை அவர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸ் ஆவணங்களில், இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை அவரே இட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டார்கள்.
போலீஸ் ஆவணங்களை போலியாக தயாரித்தது, திருத்தியது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிமாறன் சப்-இன்ஸ்பெக்டரை, அப்பதவியில் இருந்து தலைமைக்காவலராக (ஏட்டு) பதவி இறக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாகன இன்சூரன்ஸ் மோசடி மற்றும் மொபைல் போன், ஓட்டுனர் உரிமம் காணவில்லை என்பன போன்ற புகார் தரும் நபர்களிடம் பணம் லஞ்சமாக பெற்று, சான்று வழங்கியது, அதிகாரிகள் விசாரணையில் அம்பலமானதால் மணிமாறன் ஏட்டாக பதவிறியக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications