Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்புத்தூர் பாப்பம்பட்டி மசாஜ் சென்டர்களில் உள்ள பெண்கள்.. இப்படியுமா நடக்குது.. பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்துவருவதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மறியலில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.

விபச்சாரம் என்பது இன்றைக்கு பல்வேறு பகுதிகளில் குடும்பமாக நடத்துகிறார்கள்.இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் வீடியோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். குடும்பமாக கூட சில பகுதிகளில் விபச்சாரம் செய்கிறார்கள். அதாவது குடும்ப பெண்களை போல் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் செய்வோரும் ஆங்காங்கே இருக்கிறார்கள். சென்னையில் கூட சில மாதங்கள் முன்பு குடும்பமாக விபச்சாரம் செய்த கும்பல் ஒன்று சிக்கியது. அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சாரம் செய்த கும்பலும் ஆங்காங்கே சிக்கியது.

Coimbatore Complaint filed at Collector s Office over Massage centers in Pappampatti Kannampalayam areas

அதேபோல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்யும் கும்பல்கள் என்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏனெனில் மசாஜ் என்ற பெயரில் சில இடங்களில் விபச்சாரம் நடந்துள்ளது. அவர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அப்படித்தான் கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை பாப்பம்பட்டி பகுதியை சுற்றிலும் 9 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், இதில் பணியாற்றக் கூடிய இளம் பெண்கள் சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் இளைஞர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அழைப்பதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டமும் இதனால் அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் அவர்கள், இதுபோன்ற சமூக விரோத செயல்களை உடனே தடை செய்ய வேண்டும் என்று ஊர் கூடி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+