கோவை யானை தாக்குதல்: வாக்கிங் போனவரை மிதித்தே கொன்ற யானை.. புறநகரில் பொதுமக்கள் போராட்டம்
கோவை: கோவை புறநகர் பகுதிகளில் காட்டு யானை தொல்லை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலை, தடாகம் அருகே நடைப்பயிற்சி சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, கோவை அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் யானைகளை விரட்ட முயற்சி செய்தாலும், மீண்டும் மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இன்று காலை, தடாகம் அருகே உள்ள தாளியூர் கிராமத்தில் நடைப்பயிற்சி சென்ற நடராஜ் என்ற நபர், திடீரென தாக்கிய காட்டு யானையால் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், அப்பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்த தொடர்ச்சியான யானைத் தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications