வெறும் 500 ரூபாய்.. கோவை கோர்ட்டில் 28 வருடங்கள் கழித்து நடந்த விநோதம்! வாயை பிளந்த கோயம்புத்தூர்
கோவை: கோவையில் ஒரு விநோதமான சம்பவம் நடந்து ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.. எனினும் நீதித்துறையின் இந்த முயற்சி பலராலும் பாராட்டை பெற்றும் வருகிறது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்மதியோன்.. கடந்த 1996ம் ஆண்டு, தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருக்கிறார்..

மின் இணைப்பு: ஆனால், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ஒரு அதிகாரி கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கதிர்மதியோன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தந்தார்.
உடனே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், 100 ரூபாய் நோட்டுகள் 4, 50 ரூபாய் நோட்டுகள் 2 போன்றவற்றில் ரசாயனம் கலந்து, மொத்தம் 500 ரூபாய் பணத்தை கதிர்மதியோனிடம் தந்தார்.
அதிகாரிகள்: கதிர்மதியோனும், ரசாயனம் கலந்த பணத்தை, லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து, லஞ்சப்பணம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்து கைது செய்துவிட்டார்கள். இதற்கு பிறகு, கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறை சென்றபோதிலும், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.. கடைசியில் 2001ம் ஆண்டு முடிவுக்கும் வந்தது.. ஆனாலும், கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் அவருக்கு திரும்ப வழங்கப்படவேயில்லை.. எனவே, இதுதொடர்பாக 2007ல், கதிர்மதியோன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்... அந்த மனு மீது பலமுறை விசாரணையும் நடந்தது..
500 ரூபாய்: அப்போது, கதிர்மதியோனை கோர்ட்டில் நேரில் ஆஜராகி 500 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது...
அதன்படியே, கோர்ட்டில் ஆஜரான கதிர்மதியோனிடம், இப்போதுதான் அந்த 500 ரூபாய் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.. அதாவது 28 வருடங்களுக்கு பிறகு, அந்த பணம் கதிர்மதியோனிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றுக் கொண்ட கதிர்மதியோன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.. ஆனால், முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.
கோரிக்கை: இதுகுறித்து அவர் சொல்லும்போது, "28 வருடம் என்பது கொஞ்சம் தாமதமாக தெரிகிறது.. இதுதான் எனக்கு கவலையை தருகிறது.. லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க நிறைய பேர் தயங்குவதற்கு காரணமே இதுதான்.. பணத்தை இப்படி கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெறுவற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.. எனவே, நீதிமன்றம் விரைவாக பணத்தை உரியவர்களிடம் வழங்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் ஹைலைட் என்னவென்றால், கதிர்மதியோனிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகள் எதுவுமே, தற்போது புழக்கத்தில் இல்லை...!!!
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications