மார்ட்டின் கல்லூரி காசாளர் சாவில் சந்தேகம்.. கொலை செய்யப்பட்டதாக மகன் புகார்
Recommended Video
கோவை: மார்ட்டின் கல்லூரி காசாளர் சாவில் சந்தேகமுள்ளதாக அவரது மகன் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் லாட்டரி மார்டின் என்ற தொழிலதிபர். மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி எழுதிய இளைஞன் என்ற திரைப்படத்தை இவர் தயாரித்திருந்தார்.
நாடு முழுவதும் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தவர் பழனிச்சாமி.

கையை அறுத்த பழனிச்சாமி
இவரது வீடு காரனோடையில் உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தனது கையை பழனி அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

குட்டையில் சடலம்
இதையடுத்து துடியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனிச்சாமி நேற்று விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வெள்ளியங்காடு அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு எதிரே உள்ள குட்டையிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டது.

கொலை
இந்த நிலையில் இன்று அவரது மகன் ரோஹின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பழனிச்சாமி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது தலையில் யாரோ பலமாக அடித்துள்ளனர்.

சந்தேகம் இல்லை
தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன். மார்டின் அலுவலகத்தில் என் தந்தையுடன் பணிபுரிந்த இருவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. தொழிலதிபர் மார்டின் மீது எனக்கு சந்தேகம் இல்லை.

விசாரணை
எங்கள் வீட்டுக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் என் தந்தையை அடித்தார் என பரபரப்பு புகாரை அளித்துள்ளார். ஆனால் வருமான வரித்துறையினரோ நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போதே பழனிச்சாமி காயத்துடன் வந்ததால் அதனால் அவரை விசாரணைக்கு நேற்று அழைக்கவில்லை.

பரபரப்பு
அவரது வீட்டிலிருந்து பல கோடிக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications