Coimbatore Murder: கோவையில் பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்
கோவை: ரத்த பந்த உறவுகளிடம் கூட மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறில் பெற்ற வளர்த்த மகனே, தன்னுடைய தந்தையை கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (61). இவருக்கு திருமணமாகி, ராஜசேகர் என்ற ஒரு மகன் இருக்கிறார். தந்தை மகன் இடையே அவ்வப்போது சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விஸ்வநாதனுக்கு சொந்தமாக அன்னூரில் ஒரு வீடு இருந்துள்ளது.

தந்தை மகன் பிரச்சனை
அதனை கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மகன் ராஜசேகருக்கு எழுதி கொடுத்துள்ளார். விஸ்வநாதனை எதிர்காலத்தில் சரியாக பார்த்து கொள்கிறேன் என்று உறுதியளித்து தான் ராஜசேகர் அந்த வீட்டையே வாங்கியுள்ளார். ஆனால் வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட பிறகு, ராஜசேகர் தன் தந்தை விஸ்வநாதனை முறையாக கவனத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது [Coimbatore Murder].
இதனால் மனமுடைந்த விஸ்வநாதன், இதுதொடர்பாக கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ராஜசேகருக்கு கொடுத்த வீட்டை மீண்டும் தன்னுடைய பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜசேகருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, விஸ்வநாதனுக்கே வீட்டை வழங்க உத்தரவிட்டனர்.
சொத்து பஞ்சாயத்து
இதை எதிர்த்து ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2024 ஆம் ஆண்டு வீட்டை ராஜசேகரே வைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக விஸ்வநாதனுக்கு மாதம் ரூ.5,000 வழங்கி அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜசேகர் நடந்து கொள்ளவில்லை
இதன் காரணமாக விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நடவடிக்கைகளால் விஸ்வநாதன் மீது ராஜசேகர் கோபமடைந்துள்ளார். என் வீட்டை உனக்கு எழுதிக் கொடுக்கணுமா என்று தந்தையை மிரட்டி அடித்து வந்துள்ளார். இதில் விஸ்வநாதன் கண் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
கொடூர கொலை
நேற்று விஸ்வநாதனை பார்ப்பதற்காக ராஜசேகர் தன்னுடைய காரில் சென்றுள்ளார். ஒன்னக்கரசம்பாளையம் அருகே விஸ்வநாதன் வரும்போது கார் மூலம் இடித்து ராஜசேகர் அவரை கீழே தள்ளியுள்ளார். அங்கு தகராறு வெடித்த நிலையில், விஸ்வநாதனை மீண்டும் கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பிறகு ராஜசேகர் அங்கிருந்து சென்றுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விஸ்வநாதனின் உடலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?












Click it and Unblock the Notifications