முத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது
Recommended Video
கோவை : முத்து விலாஸ் மிட்டாய்க் கடையில் வேலை தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 35 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அந்த நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நெல்லை முத்து விலாஸ் மிட்டாய்க் கடை என்ற பிரபல இனிப்பு கடையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் பாலசந்திரன். இவர் தங்களது கிளை நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்குச் சென்றுள்ளனர். நேர்காணலுக்கு சென்றவர்களிடம் வேலைக்கு அமர்த்துவதுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா 30 ஆயிரம் என 35 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு பாலச்சந்திரனை நெருக்கடி செய்யவே, பாலச்சந்திரன் பணம் கொடுத்தவர்கள் தன்னை நெருக்கடி செய்து மிரட்டுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இந்த புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நெல்லை முத்துவிலாஸ் மிட்டாய்கடை உரிமையாளர் பாலசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications