ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை! ஒல்லிக்குச்சி நபரின் குறியே வேறயாமே! நகைக் கடை இல்லையாமே!
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடிக்கச் சென்ற விஜயின் நோக்கம் நகைக் கடை இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவை காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 28ஆம் தேதி அதிகாலை கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் 5.1 கிலோ கொள்ளையடிக்கப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி விஜய் (26). தருமபுரியை சேர்ந்தவர். இவரை நாங்கள் எப்படி கண்டுபிடித்தோம் என்றால் அந்த கடையில் எடுக்கப்பட்ட கைரேகைகளை ஏற்கெனவே நடந்த திருட்டு வழக்கில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரே மாதிரியாக இருந்தன.
இது மட்டுமல்லாமல் நிறைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அவரை ஆனைமலை வரை டிராக் செய்தோம். அங்கு விஜய் அவருடைய நண்பர் சுரேஷ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது முடியவில்லை. இந்த நிலையில்தான் அவருடைய மாமியார், மனைவியிடம் இருந்து நகைகளை மீட்டோம்.
அந்த வகையில் மாமியாரிடம் இருந்து 1.1 கிலோ நகைகளும் மனைவியிடம் இருந்து 3 கிலோ நகைகளையும் மீட்டோம். இந்த நகைகளில் வைரம் கிடைக்கவில்லை. அதை தருமபுரியில் உள்ள அகதிகள் முகாமில் ஆங்காங்கே புதைத்து வைத்திருந்தார். விஜய்யை பிடிப்பதில்தான் சவாலாக இருந்தது. தருமபுரியில் மலை பாங்கான பகுதியும் காட்டு பகுதியும் இருந்தது.
சிறு வயது முதலே இந்த பகுதிகளில் வளர்ந்ததால் அவருக்கு எல்லா இடங்களும் தெரிந்தது. இதனால் அங்கு அவரை பிடிக்க முடியவில்லை. 2 அல்லது 3 நாட்கள் கழித்து அவர் வெளியே வந்துவிட்டார். அவரை பின்தொடர்ந்தோம். சென்னை, திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் என தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று விஜய்யை கைது செய்த போது அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளியை பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் எந்த துப்புமே துலங்காத நிலையில் கடினமாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவர் முதலில் மொபைல் கடையில் திருடுவதற்காகத்தான் வந்தாராம். ஆனால் அங்கு ஆட்கள் இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அப்போதுதான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் நகைக் கடை கண்களில் தென்பட்டது. இதையடுத்து அங்கு நுழைந்து தனியொருவனாக கொள்ளையடித்துள்ளார் என சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications