Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை காவலர்களுக்கு மனநல ஆலோசனை.. காவல் நிலையங்களில் "மகிழ்ச்சி அலுவலர்கள்" நியமனம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: காவல் துறையினரின் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், காவல்நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் காவல் பணி செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மகிழ்ச்சி அலுவலர்கள்

மகிழ்ச்சி அலுவலர்கள்

இதனால் காவல் நிலையங்களில் காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் உலக மனநல தினத்தை அனுசரிக்கும் வகையில், கோவை மாநகரக் காவல் துறையின் 15 காவல் நிலையங்களிலும் ஸ்டேஷன் ஹாப்பினஸ் அதிகாரிகள் எனப்படும் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மாநகர காவல் நிலையங்களில் தலா இரண்டு மகிழ்ச்சி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

காவல் ஆணையரின் பிரதிநிதிகளாக செயல்படும் இவர்கள், காவலர்களுக்கு இடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு உதவியாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது தொடர்பாக பிரத்யேகப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பாக ஆலோசனை

மனநலம் தொடர்பாக ஆலோசனை

மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
மேலும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், மக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

தனி இடம் ஒதுக்கீடு

தனி இடம் ஒதுக்கீடு

பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், அந்த குற்றத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக தனி இடம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+