ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து ரெட் ஜோனிற்குள் வருகிறதா கோவை?.. மக்கள் அதிர்ச்சி
கோவை: ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து ரெட் ஜோனிற்குள் கோவை கொண்டு வரப்படும் அச்சம் நிலவுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 203 பேர் சென்னைவாசிகள் ஆவர்.
அண்மையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா பாதிப்பை வைத்து சிகப்பு, ஆரஞ்ச், பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

8 பேர்
சுத்தமாக பாதிப்பே இல்லை என்றால் அது பச்சை மண்டலமாக வரையறுக்கப்படும். இந்த நிலையில் கோவையில் கொரோனா பாதித்தோர் 142 ஆக இருந்த நிலையில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வெறும் 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

4 பேருக்கு கொரோனா
இதனால் இந்த மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் 44 வயது நபர் கொரோனா வைரஸால் நேற்று பலியாகிவிட்டார். அதோடு வேலாண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி என நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

சிகப்பு மண்டலம்
இதனால் நேற்று நிலவரப்படி கோவையில் கொரோனா எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டதால் ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்து சிகப்பு மண்டலத்திற்குள் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது.

கோவை மக்கள்
திடீர் எண்ணிக்கை உயர்வு மற்றும் பலி ஆகியவற்றால் கோவை சிகப்பு மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது. இதனால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications