பெண்களோ பெண்கள்.. காக்கி சட்டையில் ஒரு கல்யாணராமன்.. கோவை இளம் பெண் புகார்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே சில இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, கோவையில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து மேலும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ள போலீஸ் குறித்து கோவை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவர் தற்போது நீலகிரி மாவட்டம் எம்ரால்டு காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (வயது 26) என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருணமான ஒரு வருடத்திலேயே ஆறுமுகம் மீது, சந்தியா கைக்குழுந்தையுடன் கோவை டிஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

காதல் திருமணம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தியா," கடந்த சில வருடங்களுக்கு முன்பு நஞ்சுண்டாபுரம் சோதனைச்சாவடி அருகே எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அப்போது ஆறுமுகம் என்னை தூக்கிவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு சென்று தகவல் கொடுங்கள் என்று நம்பர் கொடுத்தார். நான் வீட்டிற்கு சென்றவுடன் பத்திரமாக வீடு வந்துவிட்டேன் என்று அவரிடம் கூறினேன். அப்போதிருந்து என்னிடம் மெசேஜ், கால் செய்து பேசி வந்தார்.
என்னை பிடித்திருப்பதாக கூறினார். எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசுங்கள். மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறினேன். அவரும் எங்கள் வீட்டில் பேசி கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு ஒரு கைக்குழுந்தை இருக்கிறது. திருமணம் ஆனதில் இருந்தே காயத்திரி என்ற பெண் என் கணவருக்கு அடிக்கடி கால் செய்து கொண்டே இருப்பார். அவருக்கும் ஏற்கனவே திருணமாகிவிட்டது.
பெண்களோ பெண்கள்
அவரை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சொல்லியும் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தனர். இதேபோல இன்னொரு பெண் எனக்கு அழைத்து, நீங்கள் யார். நானும் ஆறுமுகமும் காதலிக்கிறோம் என்று கூறி அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பினார். ஆறுமுகத்தின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் உரையாடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
சந்தேகமடைந்து விசாரித்ததில் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆறுமுகத்திற்கு திருமணமாகி 10, 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் விவாகரத்து கேட்டபோது அவர் என்னை மிரட்டினார். நான் போலீஸ்காரன் எதுவும் செய்ய முடியாது. அதை மீறி என்னைப்பற்றி புகாரளித்தால் அதிகபட்சம் கைது தான் செய்வார்கள். என் வேலைக்கு எந்த பிரச்சனையும் வராது. வெளியில் வந்து உங்கள் குடும்பத்தை விட மாட்டேன் என்று மிரட்டினார்.
விசாரணை
எனக்கு தெரிந்த உயரதிகாரிகளை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரிடம் இருந்து எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். மேலும் ஆறுமுகத்தால் வேறு எந்த பெண்களும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ." என்றார். சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications