காதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா.. கோவையில் பரபரப்பு!

18 வயது இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா..

    கோவை: நடுரோட்டிலேயே உடலில் பெட்ரோலி ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார் சினேகா.. இந்த சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா, 19 வயதாகிறது. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படித்து வந்தார்.

    college girl self immolation in kovai

    இதனால் சினேகா காலேஜ் ஹாஸ்டலில் தங்கி உள்ளார். நேற்று ஊருக்கு போய் பெற்றோரை பார்த்துவிட்டு, இன்று விடிகாலைதான் ஹாஸ்டலுக்கு வந்தார். அப்போது மணி 5.45 இருக்கும்..

    ஹாஸ்டல் ரூமில் இருந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வெளியே வந்தார்.. நடுரோட்டிலேயே தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார் சினேகா. இதில், வலி பொறுக்க முடியாமல் அலறினார்.. அவரது சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் பதறி அடித்துகொண்டு வந்து சினேகாவை மீட்டனர்.

    ஆனாலும் தீ உடம்பெல்லாம் வேகமாக பரவிவிட்டது. பின்னர் சினேகாவை அருகில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்குள் தகவலறிந்து சினேகாவின் பெற்றோரும் விரைந்து வந்து, சினேகாவை அங்கிருந்து பீளமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சினேகாவுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுவிட்டதால், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+